Friday 17 June 2011

துரோகக்கதைகள்...டிரைலர்

 
நித்யாவோட மொபைல் இப்போவெல்லாம் தொடர்ந்து சுவிட்ச் ஆப்லேயே இருக்கு...
அவளும் இப்போ போன் பண்றதும் இல்லை...
 
ஏறக்குறைய ஆறு மாதங்களாகி விட்டது..
நான் எப்படி விட்டேன்...
அபர்ணா...
ஆமாம்..இவளது தொடர்பு ஏற்பட்ட பிறகு ஆவலுடன் பேச அவ்வளவாக ஆர்வம் இல்லை..
இன்று ஏனோ நித்யாவுடன் பேசவேண்டும் போல இருந்தது..
 
அவள் வீட்டு நம்பரை தொடர்பு கொண்டேன்..
குரலை சற்று மாற்றிக்கொண்டேன்...
 
 
"ஹலோ?"
மறுமுனையில் "ஹலோ"
சற்று மௌனித்தேன்..
மீண்டும் மீண்டும் " ஹலோ..ஹலோ?"
எஸ்...இது நித்யாவேதான்..
ஸோ அவள்தான் போனை எடுக்கிறாள்...
துண்டித்தேன்..
மீண்டும் போன் செய்தேன்..
இப்போதும் நித்யாதான்.."ஹலோ..யாருங்க..?
"நிதியா..நான்தான்..!"
என் குரலை அவள் அடையாளம் கண்டுகொண்டாள்.. அதிர்ச்சி அடைவதையும் என்னால் உணரமுடிகிறது..
"ஒ நீயா?
"என்னாச்சு நித்யா..ஏன் என்னை மறந்துட்டே?"
"சிச்சுவேஷன  புரிஞ்சுக்கோ?
"என்ன சிச்சுவேஷன்?"
"எனக்கு நெக்ஸ்ட் மன்த்  மேரேஜ் ஆகப்போகுது?"
ஓஹோ..அப்போ நான்...?"
......
......
"நித்யா?"
"ப்ளீஸ்..இனிமேல் இந்த நம்பருக்கு போன் செய்யாதே?"
"அப்போ உன் மொபைல் நம்பர் கொடு"
"இப்போ என்கிட்டே மொபைல் இல்லை..நம்பர் வந்தவுடன் தர்றேன்..!"
"நித்யா பொய் சொல்லாதே..நான் உன்கிட்டே பேசணும்..."
.......
......
......
"நானே உனக்கு போன் பண்றேன்..ப்ளீஸ்..இனிமேல் லேண்ட் லைனுக்கு பண்ணாதே...!"
அவசரமாக போனை கட் செய்கிறாள்..